ரயில் பயணத்தின் போது சூடான பிட்சாக்களை பயணிகளுக்கு விற்பனை…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
ரயில் பயணத்தின் போது சூடான பிட்சாக்களை பயணிகளுக்கு விற்பனை…

ரயில் பயணத்தின் போது சூடான பிட்சாக்களை பயணிகளுக்கு விற்பனை செய்யும் திட்டம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. புது டெல்லி ,ஆக்ரா, ஜெய்பூர் உள்ளிட்ட 12 ரயில் நிலையங்களில் பிட்சாக்களை விற்பனை செய்யும் திட்டம் முறையாக அறிமுகப்படுத்தப்படுகிறது. இதற்காக, டோமினோ பிட்சா நிறுவனத்துடன் சேர்ந்த ஒரு நிறுவனத்துடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, பயணி ஒருவர் செல்போன் அல்லது ஆன்லைன்மூலம் ஆர்டர் கொடுத்தால் பிட்சா அவர்களது இருக்கை கொண்டுவந்து சப்ளை செய்யப்படும். பயணிகளின் வரவேற்பை பொருத்து பிட்சாக்களை விற்பனை செய்யும் திட்டம் படிப்படியாக விரிவு படுத்தப்படும் என ஐ.ஆர்.சி.டி.சி கூறியுள்ளது.

மூலக்கதை