47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர்: வீட்டுக்கு தெரியாமல் நடந்த அதிர்ச்சி செயல்

PARIS TAMIL  PARIS TAMIL
47 குழந்தைகளுக்கு தந்தையான கணவர்: வீட்டுக்கு தெரியாமல் நடந்த அதிர்ச்சி செயல்

பிரித்தானியாவில் தனக்கு தெரியாமல் 47 குழந்தைகளுக்கு கணவர் தந்தையாகியிருப்பதை அறிந்த மனைவி பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கிறார்.
 
அமெரிக்க இணையதளமான ரெடிக் தளத்தில் பொதுமக்கள் பலரும் தங்களுக்கு ஏற்படும் குழப்பங்கள் மற்றும் கேள்விகளை பதிவிடுவார்கள். அதனை பார்க்கும் பொதுமக்கள் யோசனைகள், அறிவுரைகள் வழங்குவார்கள்.
 
அந்த வகையில் fedupwife1234 என்கிற பயனாளர் ஒரு பதிவினை வெளியிட்டுள்ளார். அவருடைய 47 வயது கணவனுடன் 8 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வருகிறார். அவர்களுக்கு தற்போது 1 குழந்தை இருக்கிறது.
 
திருமணம் செய்துகொள்வதற்கு முன்னாள் நடந்த டேட்டிங்கின் போது, விந்தணுக்களை தானம் செய்திருப்பதாக அவருடைய கணவர் கூறியிருக்கிறார்.
 
2 அல்லது 4 குழந்தைகள் தான் பிறந்திருக்கலாம் என அவருடைய மனைவியும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
 
இந்த நிலையில் விந்தணுக்கள் தானம் மூலம் இதுவரை எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன என கணவரிடம் கேட்டுள்ளார். கடைசியாக கருத்தரிப்பு மையத்தில் கேட்டபடி, 47 குழந்தைகள் என கணவர் கூறியுள்ளார்.
 
இதனை கேட்டதும் அவரது மனைவி அதிர்ச்சியடைந்துள்ளார். பிரித்தானிய சட்டப்படி குழந்தை 18 வயதை அடைந்ததும் குழந்தைகளின் உயிரியல் தந்தை யார் என்கிற விவரத்தினை தெரியப்படுத்த வேண்டும். ஒருவேளை அவருடைய குழந்தைகள் எதிர்காலத்தில் தேடி வந்தால் நான் என்ன செய்வது என குழம்பி விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார்.
 
இதுகுறித்து கேள்விக்கு ஆயிரத்திற்கும் அதிகமானோர் பதிலளித்துள்ளனர். அதில் பெரும்பாலானோர், இந்த விவகாரத்திற்காக அதிகம் உணர்ச்சிப்பட வேண்டிய அவசியம் இல்லை என தெரிவித்துள்ளனர்.
 

மூலக்கதை