Yvelines - கொள்ளையர்களிடம் €75,000 மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறிகொடுத்த செல்வந்தர்!!

PARIS TAMIL  PARIS TAMIL
Yvelines  கொள்ளையர்களிடம் €75,000 மதிப்புள்ள கைக்கடிகாரத்தை பறிகொடுத்த செல்வந்தர்!!

சனிக்கிழமை இரவு, செல்வந்தர் ஒருவர் தனது ஆடம்பர கைக்கடிகாரம் ஒன்றினை கொள்ளையர்களிடம் பறிகொடுத்துள்ளார். 
 
Yvelines மாவட்டத்தில் உள்ள Vélizy2 வணிக வளாகத்தின் வாகன தரிப்பிடத்தில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது. கனடாவைச் சேர்ந்த செல்வந்தர் ஒருவர், வியாபார நோக்கோடு பிரான்சுக்கு வந்திருந்த நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரைச் சுற்றி வளைத்த இரு கொள்ளையர்கள், அவரிடம் இருந்த கைக்கடிகாரத்தை திருடியுள்ளனர். அதன் மதிப்பு €75,000 யூரோக்களாகும். 
 
தனது மனைவியுடன் Vélizy 2 வணிக வளாகத்தில் இருந்து புறப்படும் போது,  18:45 மணி அளவில், இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாக அறிய முடிகிறது. கண்காணிப்பு கமராக்கள், கைரேகை போன்ற ஆதாரங்களை திரட்டி, காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

மூலக்கதை