கொச்சையாய் பேசும் யாஷிகா: எல்லை மீறும் வார்த்தைகள் டாக்ஸ்

PARIS TAMIL  PARIS TAMIL
கொச்சையாய் பேசும் யாஷிகா: எல்லை மீறும் வார்த்தைகள் டாக்ஸ்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற அடல்ட் காமெடி படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்த படத்திற்கு பின்னர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  
 
இவர் அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு விமர்சனங்களுக்கு ஆளாகி வருகிறார். ஆனாலும்  அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுவதை அவர் நிறுத்துவதில்லை. 
 
சமீபத்தில், இருட்டு அறையி முரட்டு குத்து படத்தில் இருந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, கெஸ் தி மூவி என்ற கேப்சனை போட்டுள்ளார். இதற்கு பலர் கமெண்டுகள் தெரிவித்த நிலையில், அந்த கமெண்டுகளுக்கு சலிக்காமல் பதில் அளித்துள்ளார். 
 
 
அதில் சில கமெண்டுகள் கெட்ட வார்த்தையில் இருந்தால், பதிலுக்கு யாஷியாகவும் கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி பதில் அளித்துள்ளார். பலரால் பார்க்கப்படும் பதிவுகளில் இப்படி கொச்சையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருப்பது கடும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. ஆனால் யாஷிகா இதெற்கெல்லாம் கவலைப்படுவதாக தெரியவில்லை. 
 

மூலக்கதை