தனிநபர் தாக்குதலை நிறுத்துங்கள்....... மோடியை எச்சரித்த சந்திரபாபு நாயுடு

தினகரன்  தினகரன்
தனிநபர் தாக்குதலை நிறுத்துங்கள்....... மோடியை எச்சரித்த சந்திரபாபு நாயுடு

டெல்லி: ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வலியுறுத்தி டெல்லியில் ஆந்திர முதல்வர்  சந்திரபாபு நாயுடு இன்று ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகிறார். டெல்லியில் உள்ள ஆந்திர பவனில் 12 மணி தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அவர் நடத்தி வருகிறார். இதில் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக பங்கேற்றுள்ளனர். இந்த போராட்டத்தில் நேரில் வந்து கலந்துகொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆதரவு தெரிவித்தார். உண்ணாவிரத போராட்டத்தின் போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: மத்திய அரசுக்கு எதிராக இந்த போராட்டம் நடக்கிறது.  எங்களது கோரிக்கைகளை நீங்கள் நிறைவேற்றாவிட்டால், அதை எப்படி பெறுவது என எங்களுக்கு தெரியும்.இது ஆந்திர மக்களின் சுய மரியாதை சம்பந்தப்பட்ட பிரச்சனை. எங்களது சுயமரியாதை மீது நீங்கள் எந்த வகையிலாவது தாக்குதல் நடத்த நினைத்தால் அதை நாங்கள் பொறுத்துக்கொள்ள மாட்டோம். தனிநபர் தாக்குதலை நிறுத்திக் கொள்ள வேண்டும் என பாஜக அரசை, குறிப்பாக பிரதமரை எச்சரிக்கிறேன் என சந்திரபாபு நாயுடு கூறினார். டெல்லியில் போராட்டம் நடத்துவதற்காக ஆந்திராவில் இருந்து 2 ரயில்களில் டெல்லிக்கு போராட்டக்காரர்களை சந்திரபாபு நாயுடு அழைத்துச் சென்றுள்ளார். இந்த போராட்டத்திற்காக கோடிக்கணக்கான பணம் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆந்திர பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை