பங்குச்சந்தைகள் சரிவு - ரூபாயின் மதிப்பு உயர்வு

தினமலர்  தினமலர்
பங்குச்சந்தைகள் சரிவு  ரூபாயின் மதிப்பு உயர்வு

மும்பை : வர்த்தகவாரத்தின் முதல்நாளில் இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கின. அமெரிக்கா - சீனா இடையேயான வர்த்தக போட்டி, முன்னணி நிறுவன பங்குககள் சரிவுடன் காணப்படுவது போன்ற காரணங்களால் இன்றைய வர்த்தகம் சரிவுடன் துவங்கின.

வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 191.15 புள்ளிகள் சரிந்து 36,355.33-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 48.80 புள்ளிகள் சரிந்து 10,894.80-ஆகவும் வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு உயர்வு

பங்குச்சந்தைகள் சரிவுடன் இருந்த போதிலும் ரூபாயின் மதிப்பு உயர்வுடன் காணப்படுகின்றன. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.71.22ஆக வர்த்தகமானது.

மூலக்கதை