அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துங்கள்! – கேப்பாப்பிலவு மக்கள்

என் தமிழ்  என் தமிழ்
அரசியல் ஆதாயம் தேடுவதை நிறுத்துங்கள்! – கேப்பாப்பிலவு மக்கள்

எமது போராட்டத்தை தாமே நடத்துவதாக உரிமை கோருவதை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். எமது போராட்டத்தை அரசியலாக்க வேண்டாம் என்று கேப்பாபிலவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவித்தனர் . இராணுவத்தின் வசம் உள்ள தமது காணிகளை விடுவிக்க வலியுறுத்தி கேப்பாபிலவு மக்கள் கடந்த எட்டுமாதங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“எமது போராட்டத்துக்கு உணவு உள்ளிட்ட உதவிகளைப் பல்வேறு மனிதாபிமான அமைப்புகளும் கட்சிகளும் உதவி வருகின்றமை உண்மையே. நாம் எமது நிலத்துக்கான மீட்பு போராட்டத்தை ஆரம்பித்த பின்பு தான் அரசியல்கட்சிகள் எம்மை நோக்கி வரத் தொடங்கின. எமக்கு உதவி செய்தனர். இது ஒரு மக்கள் போராட்டம். இதை அரசியல் இலாபத்துக்காக எந்த கட்சியும் பயன்படுத்துவதை நாம் விரும்பவில்லை.”என்று போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவித்தனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை