மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: – 3 பேர் பலி

என் தமிழ்  என் தமிழ்
மீண்டும் அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: – 3 பேர் பலி

அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள வணிக பூங்காவில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவில் உள்ள மேரிலேண்ட் மாகாணத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ஹார்போர்டு கவுண்டி என்ற இடத்தில், எம்மோர்டன் என்ற வணிகப் பூங்கா உள்ளது. நேற்று காலை, இந்தப் பூங்காவுக்கு வந்த மர்ம நபர் ஒருவர், திடீரென அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாகச் சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த போலீஸார் அங்கு விரைந்து சென்றனர். இறந்தவர்களின் உடல்களைக் கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளித்துவருகின்றனர். இதுதொடர்பாக போலீஸார் கூறுகையில், துப்பாக்கிச் சூடு நடத்திய நபரின் அடையாளம் தெரியவந்துள்ளது. அவரது பெயர் ரடீ லபீப் பிரின்ஸ். இவர், ஏற்கெனவே குற்றவியல் பின்னணிகொண்டவர் என தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன், அமெரிக்காவில் நடைபெற்ற ஓர் இசைக் கச்சேரியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். தற்போது, மீண்டும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

மூலக்கதை