விமானங்களின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்: – அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா

என் தமிழ்  என் தமிழ்
விமானங்களின் தகவல்களை ஹேக் செய்த மர்ம நபர்கள்: – அதிர்ச்சியில் ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய அரசுக்கு சொந்தமான ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகிய 2 போர் விமானங்களின் தகவல்களை மர்ம நபர்கள் ஹேக் செய்ததால் அந்நாட்டு அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. இதில் ஸ்டெல்த் எஃப்-3 என்ற போர் விமானம் அமெரிக்க அரசாங்கத்திடம் இருந்து வாங்கப்பட்டதாகும். ஆஸ்திரேலிய அரசின் விமானத்துறையில் ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 ஆகிய 2 விமானங்களும் பல காலமாக முக்கிய பங்காற்றி வருகின்றது.

இந்நிலையில் ஸ்டெல்த் எஃப்-3 மற்றும் பி-8 கண்காணிப்பு விமானம் ஆகியவற்றின் ரகசியங்களில் சிலவற்றை ஹேக்கர்கள் திருடியுள்ளனர். இந்த ஹேக்கிங் வேலையில் ஈடுபட்டது யார் என்று இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் ‘சைனா சோப்பார்’ என்ற ஹேக்கிங் கருவியை வைத்து திருடியுள்ளதாக கண்டுபிடித்துள்ளனர். மேலும் இதுகுறித்து துறை ரீதியான விசாரணைக்கு ஆஸ்திரேலிய அரசு உத்தரவிட்டுள்ளது

மூலக்கதை