தாயின் சடலத்துடன் வாழந்த மூன்று வயது குழந்தை!

PARIS TAMIL  PARIS TAMIL
தாயின் சடலத்துடன் வாழந்த மூன்று வயது குழந்தை!

 அமெரிக்காவில் தாயின் சடலத்துடன் மூன்று நாட்கள் தனியாக இருந்த குழந்தையை பற்றிய செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
அமெரிக்காவின் East Hartford கவுண்டியை சேர்ந்தவர் Twanna Toler (37). இவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
 
இந்நிலையில், சில தினங்களாக Twanna தன் வீட்டை விட்டு வெளியில் வராமல் இருந்துள்ளார்.
 
இதையடுத்து Twannaவுக்கு தெரிந்த நபர் ஏதேச்சையாக அவர் வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்துள்ளார்.
 
அப்போது Twanna படுக்கையறையில் சடலமாக கிடந்துள்ளார். அவர் அருகில் அவரின் 3 வயது குழந்தையும் இருந்துள்ளது.
 
3 நாட்களுக்கும் மேலாக தாயின் சடலத்துடன் குழந்தை தனியாக இருந்தது தெரியவந்துள்ளது.
 
பின்னர் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்ட பொலிசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பிரேத பரிசோதனைக்கு பின்னரே Twanna மரணத்துக்கான காரணம் தெரிய வரும் என பொலிசார் கூறியுள்ளனர்.

மூலக்கதை