டோனியின் மூன்று மொபைலை திருடிய திருடர்கள்!

PARIS TAMIL  PARIS TAMIL
டோனியின் மூன்று மொபைலை திருடிய திருடர்கள்!

 முன்னாள் இந்திய கேப்டன் டோனி தங்கியிருந்த ஹோட்டலில் தீ விபத்து ஏற்பட்ட கேப்பில் அவரின் மூன்று செல்போன்களை திருடர்கள் சுட்டுள்ளனர்.

 
இந்தியாவில் நடக்கும் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சிக்கோப்பை தொடரைப்போலவே, 50 ஓவர் கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தொடர் தற்போது நடக்கிறது.இதில் தமிழகம் அணி ஏற்கனவே ஃபைனலுக்கு முன்னேறிவிட்டது. 
 
இந்நிலையில் முன்னாள் இந்திய கேப்டன் டோனி தலைமையிலான ஜார்கண்ட் அணி, இரண்டாவது அரையிறுயில் பெங்கால் அணியை எதிர்கொண்டது. இதற்காக தோனி மற்றும் அணி வீரர்கள் துவாரகாவில் உள்ள ஹோட்டலில் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
 
ஆனால் ஹோட்டலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனால் வீரர்கள் அவர்கள் அறையில் வைத்திருந்த பொருட்களை அப்படியே வைத்துவிட்டு, வெளியே வந்துள்ளனர். இந்த கேப்பில் ஜார்கண்ட கேப்டன் டோனியின் மூன்று செல்போன்களை திருடர்கள் திருடிவிட்டதாக தெரிகிறது.
 
இதுகுறித்து டோனி டில்லி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

மூலக்கதை