மிகுந்த வலியுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய கோஹ்லி!

PARIS TAMIL  PARIS TAMIL
மிகுந்த வலியுடன் மைதானத்தை விட்டு வெளியேறிய கோஹ்லி!

 இந்தியா-அவுஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணித்தலைவர் கோஹ்லி பாதியிலேயே மைதானத்தை விட்டு வெளியேறிய சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 
இரு அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி இன்று ராஞ்சியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
 
நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி துடுப்பெடுத்தாட முடிவு செய்ய அவுஸ்திரேலிய வீரர்கள் களமிறங்கி முதல் இன்னிங்சில் விளையாடி வருகின்றனர்.
 
போட்டியின் போது ஜடேஜா வீசிய பந்தை அவுஸ்திரேலிய வீரர் பீட்டர் ஹண்ட்ஸ்கோம் பவுண்டரியை நோக்கி அடித்தார். பந்தை விரட்டிய விராட் கோஹ்லி பவுண்டரிக்கு அருகே டைவ் அடித்து தடுத்தார்.
 
இதன் போது அவரின் தோள்பட்டை மைதானத்தில் பயங்கரமாக மோதியது. மிகுந்த வலியுடன் காணப்பட்ட கோஹ்லி உடனடியான மைதானத்திலிருந்து வெளியேறினார்.
 
அவர் ஓய்வெடுத்து களத்திற்கு திரும்பும் வரையில் ரஹானே அணித்தலைவராக செயல்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை