காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு!!
நேற்று அதிகாலை SAINT-OUEN (93) இல் காவற்துறையினர் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சன்துவானில் உள்ள marché aux puces சந்தைப் பகுதியில், கலவரம் நடப்பதாக அறிவிக்கப்பட்டதையடுத்து அங்கு காவற்துறையினர் சென்றுள்ளனர்.
அங்கு சென்ற காவற்துறையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொளள்ளப்பட்டுள்ளது. இவர்கள் மீது தொடர்ச்சியாக ஏழு தடவைகள் சுட்பட்டுள்ளன. ஆனாலும் யாரும் காயமடைந்திருக்கவில்லை.
சிற்றுந்துருளியில் வந்து காவற்துறையினர் மீது துப்பாக்கிக் பிரயோகம் செய்தவர்களை நோக்கிக் காவற்துறையினரும் மூன்று தடவைகள் திருப்பிச் சுட்டுள்ளனர். ஆனாலும் காயங்களின்றி குற்றவாளிகள் தப்பிச் சென்றுள்ளனர். அந்தப்பகுதி சுற்றிவளைக்கப்பட்டுத் தேடுதல் நடாத்தப்பட்டாலும், யாரும் இதுவரை கைது செய்யப்படவில்லை.