8 பெண்கள் சிறை வைப்பு : 205 ஆண்டுகள் தண்டனை

தினமலர்  தினமலர்

அட்லாண்டா: அமெரிக்காவில் 8 இளம்பெண்களை கடத்தி சிறைவைத்திருந்த நபருக்கு, 205 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அமெரிக்காவின் அட்லாண்டா பகுதியில் குடியிருந்து வருபவர் கெண்ட்ரிக் ராபர்ட்ஸ், 33. இவர், இளம்பெண்களை மாடலிங் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி, கடத்தி சிறை வைத்துள்ளதாக புகார் எழுந்தது. விசாரணையில் ஈடுபட்ட அதிகாரிகள், அந்த நபரின் குடியிருப்பில் சிறைவைக்கப்பட்டிருந்த 8 பெண்களை மீட்டனர்.

மூலக்கதை