கைதாகிறார் மாஜி அதிபர்

தினமலர்  தினமலர்
கைதாகிறார் மாஜி அதிபர்

சியோல்: ஊழல் குற்றச்சாட்டால் பதவி நீக்கம் செய்யப்பட்ட தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குவென் ஹை விரைவில் கைது செய்யப்படவுள்ளார். தென்கொரிய சிறப்பு விசாரணை முகமை வெளியிட்ட அறிக்கையில், தென்கொரியாவின் சிறப்பு விசாரணை முகமை பார்க்கிடம் நடத்திய விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.மேலும் ஆதாரங்களை அழிக்க அவர் முயற்சி செய்து வருகிறார்; எனவே விரைவில் அவரை கைது செய்ய தலைமை நீதிமன்றத்திடமிருந்து உத்தரவைப் பெற இருக்கிறோம்" என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு விசா ரணை முகமையிடம் அனைத்து குற்றச்சாட்டுகளையும் பார்க் குவென் ஹை மறுத்துள்ளார். முன்னதாக, பார்க் குவென் ஹை மற்றும் அவரது தோழி சோய் சூன் சில் ஆகியோர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து தென் கொரிய நாடாளுமன்றம், அதிபர் பார்க்கை பதவி நீக்கம் செய்தது. இதை அந்நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் மார்ச் 10ல் உறுதி செய்தது.பார்க் குவென் ஹை பதவியில் இருந்து நீக்கப்பட்டதை தொடர்ந்து புதிய அதிபருக்கான தேர்தல் மே 9ம் தேதி நடைபெறும் என

அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை