தமிழக சட்டத்தரணியின் வீட்டில் தேசிய தலைவர்!

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழக சட்டத்தரணியின் வீட்டில் தேசிய தலைவர்!

 தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தேசிய தலைவர் மீதான பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

 
அவர் தேசிய தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படத்தினை தனது வீட்டின் கதவில் செதுக்கியுள்ளார் 
 
தமிழ் நாட்டைச் சேர்ந்தவர் சதீஸ்குமார். இவர் வழக்கறிஞராக பணியாற்றிவருகின்றார்.
 
இவர் அண்மையில் புதிதாக வீடு ஒன்றைக் கட்டியிருக்கிறார். அந்த வீட்டின் பிரதான நுழைவு வாயிலின் கதவில், தேசிய தலைவரின் உருவப்படம் ஒன்றினைச் செதுக்கியிருக்கிறார்.
 
தலைவரின் உருவப்படத்திற்கு கீழ், தமிழீழ விடுதலைப் புலிகளின் சின்னமும் பொறிக்கப்பட்டிருக்கிறது. 
 
இவரின் வீட்டிற்கான புதுமனைப் புகுவிழாவிற்கு வந்திருந்தவர்கள், பிரபாகரனின் உருவப்படத்தினைப் பார்த்து, ஆச்சரியமடைந்துள்ளதுடன், மகிழ்ச்சியுடன் புகைப்படங்களும் எடுத்துச் சென்றனர் என்று சதீஸ்குமார் தெரிவித்துள்ளார்.
 

மூலக்கதை