குழு வன்முறையில் ஈடுபட்ட 18 பேருக்கு ஒரே நாளில் சிறைத்தண்டனை! - வடக்கு பிரான்சில் பரபரப்பு!

PARIS TAMIL  PARIS TAMIL
குழு வன்முறையில் ஈடுபட்ட 18 பேருக்கு ஒரே நாளில் சிறைத்தண்டனை!  வடக்கு பிரான்சில் பரபரப்பு!

இன்று, ஒரே நாளில் 18 பேருக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. நீண்டகாலம் நிலுவையில் இருந்த வழக்கு இன்று முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
பிரான்சின் வடக்கு பிராந்தியங்களில், வன்முறை கொள்ளை ஆட்கடத்தல் போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 35 பேர் கைதுசெய்யப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர். தீவிர வலதுசாரி கட்சி தலைவர் ஒருவருக்கு பின்புலமாக பல வன்முறைச் சம்பவங்களை இவர்கள் அரங்கேற்றியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. neo-Nazi gang என அழைப்படும் இந்த குழுவில் இருந்த 18 பேருக்கு இன்று திங்கட்கிழமை Ameins சிறப்பு நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. 
 
பல்வேறு இடங்களைச் சேர்ந்த இந்த குழு கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிகளில் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தமை தெரியவந்துள்ளது. மேலதிக தகவல்கள் வெளியிடப்படவில்லை.

மூலக்கதை