பாலியல் பலாத்கார காட்சி: ரவீணா கதறல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாலியல் பலாத்கார காட்சி: ரவீணா கதறல்

சாது, ஆளவந்தான் படங்களில் நடித்தவர் ரவீணா டான்டண். இந்தி படங்களில் நடித்து வருகிறார்.

மதர் என்ற படத்தின் இறுதிகட்ட பணிகளில் பங்கேற்றிருக்கிறார். படத்தின் டப்பிங் பேசும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென்று கதறி அழ ஆரம்பித்தார்.

அதைக்கண்டு இயக்குனர் அஸ்தர் சயத் பதறினார். பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணாக ரவீணா இதில் நடிக்கிறார்.

திரையில் அக்காட்சிகளின்போது டப்பிங் பேச முடியாமல்தான் அவர் அழுதார். பின்னர் இதுபற்றி ரவீணா கூறியதாவது: இப்படத்தில் சில காட்சிகள் நிஜமாகவே கடினமாகவும், பயங்கரமாகவும் அமைக்கப்பட்டிருந்தது.

அதை திரையில் பார்த்தபோது என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

உடனடியாக டப்பிங்கும் பேச இயலவில்லை.

நான் அழுதுவிட்டேன். அக்காட்சிகள் என்னை தொந்தரவு செய்வதுபோலவே இருந்தது.

அதனால்தான் சிறிதுநேரம் எனது பணியை நிறுத்திவிட்டு மீண்டும் பலத்தை திரட்டி பழைய நிலைக்கு திரும்பினேன். இந்த கதை மிகவும் வலுவானதாக உணர்கிறேன்.

எனக்கு ஒரு மகள், 2 வளர்ப்பு மகள்கள் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை எண்ணி கலங்குகிறேன்.

மகள்கள் மட்டுமல்ல பிள்ளைகளுக்கும் என்ன பாதுகாப்பு இருக்கிறது.

யாராவது இங்கு பாதுகாப்பாக இருக்க முடிகிறதா? இவ்வாறு ரவீணா டான்டண் கூறினார்.

.

மூலக்கதை