காஷ்மீரில் பரபரப்பு: அமைச்சர் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் - போலீஸ்காரர் காயம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
காஷ்மீரில் பரபரப்பு: அமைச்சர் வீட்டின் மீது தீவிரவாதிகள் தாக்குதல்  போலீஸ்காரர் காயம்

ஸ்ரீநகர்- காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.
காஷ்மீரில் முதல்வர் மெகபூபா முப்தி தலைமையிலான பிடிபி-பாஜ கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது அவையில் ஹஜ் மற்றும் வக்பு வாரிய அமைச்சராக இருப்பவர் பரூக் அப்திராபி.

இவரது பாரம்பரிய வீடு அனந்த நாக் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நேற்று நள்ளிரவு தீவிரவாதிகள் சிலர் அமைச்சர் வீட்டின் மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் பதிலடி கொடுத்தனர். இதையடுத்து தீவிரவாதிகள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

இந்த சம்பவத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ்காரர் ஒருவர் காயமடைந்தார்.

இதையடுத்து அவர் ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் போலீசாரை தாக்கி தீவிரவாதிகள் துப்பாக்கியை பறித்து சென்ற நிலையில் மற்றொரு பகுதியான பத்கம்புரா என்ற இடத்தில் போலீசாருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காஷ்மீரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் சம்பவங்களால் அங்கு பரபரப்பு நிலவி வருகிறது.

.

மூலக்கதை