தன்னை நோக்கி குரைத்த தெரு நாயை சுட்டு கொன்ற அதிகாரி - உ.பி.யில் பொது மக்கள் அதிர்ச்சி

தமிழ் முரசு  தமிழ் முரசு
தன்னை நோக்கி குரைத்த தெரு நாயை சுட்டு கொன்ற அதிகாரி  உ.பி.யில் பொது மக்கள் அதிர்ச்சி

லக்னோ- உத்தரபிரதேசத்தில் தன்னை நோக்கி குரைத்த நாயை கண்டு ஆத்திரம் அடைந்த ஓய்வு பெற்ற அதிகாரி அதை சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் உள்ள மொராதாபாத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ஒருவர் தினமும் காலையிலும் மாலையிலும் தனது வீட்டில் இருந்து வெளியில் கிளம்பி நடைபயிற்சி செல்வது வழக்கம்.

அந்த பகுதியில் தெருநாய் ஒன்று நீண்ட நாளாக இருந்து வந்துள்ளது. இவர் எந்த வழியாக போனாலும் இவரை கண்டதும் விடாமல் துரத்தி துரத்தி குரைத்து வந்துள்ளது.



இதனால் தினமும் மனஉளைச்சல் அடைந்த அவர் நாயின் மீது ஆத்திரம் அடைந்தார். இதையடுத்து நேற்று வழக்கம் போல் நடைபயிற்சி சென்றுள்ளார்.

அப்போது தன்னுடன் உரிமம் பெற்று வாங்கி வைத்திருந்த கைத்துப்பாக்கியையும் எடுத்து சென்றார். இ்ம்முறை தன்னை நோக்கி குரைத்த நாயை எந்தவித ஈவு இரக்கம் இன்றி சுட்டு கொன்றார்.   துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர்.

இந்த சம்பவத்தை நேரில் கண்ட சிலர் அதிர்ச்சி அடைந்தனர்.   இதையடுத்து விலங்கு உரிமை ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில் தற்போது அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

.

மூலக்கதை