வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கு....! 9 பொருட்களுக்கான தீர்வை நீக்கம்

PARIS TAMIL  PARIS TAMIL
வெளிநாடுகளிலிருந்து இலங்கை செல்வோருக்கு....! 9 பொருட்களுக்கான தீர்வை நீக்கம்

 வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்குள் கொண்டு வரப்படும் சில பொருட்களுக்கான சுங்கத் தீர்வைகளை முற்றாக அகற்றுவதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்வை நீக்கத்தின் கீழ் ஒன்பது பொருட்கள் விலக்களிக்கப்பட்டுள்ளது. 

 
வெளிநாடுகளில் ஓராண்டுக்கு மேல் பணியாற்றிய இலங்கையர்களின் நலனை கருத்திற் கொண்டு இந்த நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. 
 
வெளிநாடுகளில் பணியாற்றி விட்டுத் திரும்பும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நன்மைகளை அளிக்க முடிவு செய்துள்ளதாக, சுங்கத் திணைக்கள பிரதி பணிப்பாளர் பராக்கிரம பஸ்நாயக்க தெரிவித்துள்ளார். 
 
குளியலறை கருவிகளின் தொகுதி ஒன்று, படுக்கையறைத் தொகுதி ஒன்று, 3500 சிசி திறனுக்குக் குறைவான உந்துருளி ஒன்று, ஆகியவற்றையும் வெளிநாடுகளில் இருந்து திரும்பும் தொழிலாளர்கள் தீர்வையின்றி எடுத்து வர முடியும்.
 
அத்துடன், சூரிய கலன்கள், கணனிகள், மடிக்கணினிகள், இரண்டு கைபேசிகள் ஆகியவற்றையும் தீர்வையின்றி எடுத்து வர முடியும் என்பதுடன், 55 அங்குலத்துக்கு உட்பட்ட தொலைக்காட்சிகளையும் தீர்வையின்றி கொள்வனவு செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மூலக்கதை