பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 100 பேர் கைது

தினமலர்  தினமலர்
பாகிஸ்தானில் இந்திய மீனவர்கள் 100 பேர் கைது

கராச்சி: குஜராத்தை சேர்ந்த 100 மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் இந்திய மீனவர்கள் நுழைந்து மீன் பிடித்ததாக பாக்., விசாரணை அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் இன்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ரிமாண்ட் செய்யப்படுவார்கள். கடந்த மார்ச் மாதம், இந்திய 225 மீனவர்களை பாகிஸ்தான் கைது செய்தது.

இதுபோல் இலங்கை கடற்படையினரால், சமீபத்தில், 12 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


மூலக்கதை