காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு!!

PARIS TAMIL  PARIS TAMIL
காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு!!

ஒரு குடும்பத் தகராறினைத் தீர்த்துவைக்கச் சென்ற காவற்துறை வீரர் மீது வாள் வெட்டு நடந்துள்ளது. இந்தச் சம்பவம் இன்று பரிசின் 19வது பிரிவில் நடந்துள்ளது.
 
பரிஸ் பத்தொன்பதின் Curial பகுதியில், ஒரு குடும்பத்தில் வன்முறை நடப்பதாகத் தகவல் கிடைத்ததையடுத்து, அங்கு சென்ற காவற்துறையினர், அந்த வீட்டின் கதவைத் திறந்தபொழுது, அதில் ஒரு காவற்துறை வீரர் மீது, சரமாரியான வாள்வெட்டு நடந்துள்ளது. அவருடன் வந்த மற்றைய காவற்துறை வீரர், உடனடியாகத் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததில், தாக்குதலில் ஈடுபடப்டவர் கொல்லப்பட்டுள்ளார். 
 
இவர் துப்பாக்கியால் சுடும்போது, இவர் மீதும் வாள் வெட்டு நடாத்தப்பட்டதில் இரண்டு காவற்துறை வீரர்களும் படுகாமடைந்துள்ளனர்.
 
இதில் முதலில் வெட்டுண்ட காவற்துறை வீரர், மிகவும் உயிர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார். 
 
காவற்துறையினரின் காவற்துறையினரான IGPN (inspection générale de la police nationale) விசாரணைகளைப் பொறுப்பேற்றுள்ளனர்.
 

மூலக்கதை