இரவு விடுதியில் துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி; 15 பேர் காயம்

தினமலர்  தினமலர்

சின்சினாட்டி: அமெரிக்காவில், இரவு விடுதியில், இரண்டு பேர், துப்பாக்கியால் சுட்டதில், ஒருவர் இறந்தார்; 15க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். அமெரிக்காவின் ஓஹியோ மாகாணம், சின்சினாட்டியில், இரவு விடுதி உள்ளது. நேற்று முன்தினம் சனிக்கிழமை என்பதால், இளைஞர்கள் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. விடுதியில், பலர் மது குடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இரண்டு பேர், திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். விடுதியில் இருந்தவர்கள் அலறியடித்து ஓடினர். என்ன நடக்கிறது என, யாருக்கும் தெரியவில்லை.தகவல் அறிந்து போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள், துப்பாக்கியால் சுட்டவர்கள் தப்பி விட்டனர். இந்த துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் இறந்தார்; காயம் அடைந்த, 15க்கும் அதிகமானோர், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

மூலக்கதை