இரண்டு இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய ஈராக் அகதி!!

PARIS TAMIL  PARIS TAMIL
இரண்டு இளைஞர்களின் உயிரை காப்பாற்றிய ஈராக் அகதி!!

ஈராக் நாட்டைச் சேர்ந்த அகதி இளைஞன் ஒருவர் இரண்டு பிரெஞ்சு இளைஞர்களின் உயிரைக் காப்பாற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் அகதியாக பிரான்சில் தஞ்சம் புகுந்த 31 வயதுடைய ஜசீன் என்பரே மேற்படி சாகசத்தை மேற்கொண்டுள்ளார். நேற்று சனிக்கிழமை இரவு Toulouse இல் உள்ள அவரது வீட்டில்  இருக்கும் போது அவசர அழைப்பு ஒலி எழுப்பப்பட்டது. அவசர அழைப்பு ஒலி அவர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இருந்தே கேட்டுள்ளது. குறித்த வீடு தீப்பிடித்து எரிவதை பார்த்த மேற்படி நபர் வீட்டுக்குள் நுழைந்து உள்ளே நினைவிழந்த நிலையில் கிடந்த நபர் ஒருவரை மீட்டுள்ளார். மேலும் குறித்த வீட்டுக்குள் குழந்தைகள் யாரேனும் உள்ளார்களா என தேடி பார்த்ததில், மேலும் 21 வயதுடைய இளைஞன் ஒருவன் உள்ளே இருப்பது தெரியவந்து, குறித்த இளைஞனையும் காப்பாறினார். 
 
குறித்த வீட்டின் கதவு திறந்தே கிடந்தது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. துணிச்சலான இந்த செயலால் இரு உயிர்கள் காப்பாற்றப்பட்டது என காவல்துறையினர் பாராட்டினார்கள். குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைகளுக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மூலக்கதை