காலை உணவு தாமதமானதால் தாய்க்கு மகன் செய்த கொடூரம்!

PARIS TAMIL  PARIS TAMIL
காலை உணவு தாமதமானதால் தாய்க்கு மகன் செய்த கொடூரம்!

 மகனால் அவரது தாய் தடியொன்றினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

 
வெலிகம - படவல பிரதேசத்தில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
 
காலை உணவு தாமதமானதால் இவ்வாறு மகனால் தாய் தாக்கப்பட்டுள்ளதாக என தெரிவிக்கப்படுகின்றது.
 
42 வயதுடைய சந்தேகநபர் மனநிலை பாதிக்கப்பட்டவராவார். அவர் நீண்டகாலமாக அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவந்துள்ளது.
 
75 வயதுடைய வயோதிப தாயொருவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

மூலக்கதை