'டி.எம்.' ஆனதில் மகிழ்ச்சி, நன்றி கடவுளே: சிம்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டி.எம். ஆனதில் மகிழ்ச்சி, நன்றி கடவுளே: சிம்பு

சென்னை: தாய்மாமன் ஆனதில் மகிழ்ச்சியாக உள்ளது என்று நடிகர் சிம்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிம்புவின் தங்கை இலக்கியா ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். இதனால் டி. ராஜேந்தர், சிம்பு ஆகியோர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

சிம்பு திரையில் அஸ்வின் தாத்தாவாகியுள்ள நிலையில் டி. ராஜேந்தர் நிஜத்தில் தாத்தா ஆகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து சிம்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

தொடர்ந்து ஆசி மற்றும் மகிழ்ச்சி அளிப்பதற்கு இறைவனுக்கு நன்றி #HappyMan #ThaaiMaman #ஆசிர்வதிக்கப்பட்டவன் என தெரிவித்துள்ளார்.

Thanks to almighty for the consecutive bliss and happiness #HappyMan #ThaaiMaman #Blessed pic.twitter.com/IThnLrIGYV

சிம்பு தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் 4 கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கும் ஆசை இல்லை என்றும், தன்னை ஆதரிக்கும் சிலருக்காக நடித்து வருவதாகவும் அவர் அண்மையில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை