அமெரிக்காவில் மஹிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

PARIS TAMIL  PARIS TAMIL
அமெரிக்காவில் மஹிந்தவுக்கு காத்திருக்கும் ஆபத்து!

 

 
அமெரிக்காவில் வைத்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக தெரிய வருகிறது. 
 
இவ்வாறான நிலையில் மஹிந்தவை அமெரிக்காவுக்கு வர வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில் அமெரிக்காவில் வாழும் பௌத்த தேரர் ஒருவரினால், மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. 
 
வல்பொல பியநந்த தேரரின் அழைப்பிற்கமைய கலிபோர்னியா விகாரையில் இடம்பெறும் மத வழிப்பாட்டில் கலந்துக் கொள்வதற்காக மஹிந்த ராஜபக்ச அமெரிக்கா நோக்கி செல்ல ஆயத்தமாகியுள்ளார்.
 
இந்த நிலையில் அவரது பிரதிநிதிகள் சிலர் அண்மையில் அங்குள்ள மேயரை சந்தித்து இந்த விஜயம் தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளனர்.
 
மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போர்க்குற்ற குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் அமெரிக்கா வரும் மஹிந்தவுக்கு எதிராக யாராவது நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டால், கைது செய்யப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக மேயர் தெளிவுபடுத்தியுள்ளார். 
 
இதனையடுத்து அமெரிக்கா செல்லும் மஹிந்தவின் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. அவருக்கு பதிலாக கோத்தபாய ராஜபக்ச அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மூலக்கதை