13 வயது மாணவியை சீரழித்த வக்கிர ஆசிரியர்கள்:ராஜஸ்தானில் கொடூரம்

தினமலர்  தினமலர்

பைகனூர்: ராஜஸ்தானில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த 13 வயது பள்ளி மாணவியை இரண்டு ஆண்டுகளாக மிரட்டி 8 ஆசிரியர்கள் பாலியல் பலாத்காரம் செய்துவந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

கர்ப்பம்



ராஜஸ்தானின் பைகானூரி்ல உள்ள நோஹா என்ற பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவி, உடல் நலம்பாதிக்கப்பட்டு நேற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். ஏற்கனவே அந்த மாணவி கடந்த சில வருடங்களாக ரத்த புற்றுநோயால் அவதியுற்று சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவர் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அந்த மாணவியை அவர் படித்து வரும் பள்ளி ஆசிரியர்கள் 8 பேர் கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்திருப்பது தெரியவந்தது. வெளியே சொன்னால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.

மிரட்டினர்



இது கடந்த ஆண்டு தான் மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளின் எதிர்காலம் கருதியும், பலாத்காரம் செய்த வக்கிர ஆசியர்கள் மொபைலில் படம் எடுத்துள்ளதால் அதை அம்பலபடுத்திவிடுவதாக மாணவியை மிரட்டி வந்ததுள்ளைால் பெற்றோர் போலீசில் புகார் கூறவில்லை.

நேற்று இந்த பிரச்னை பெரிதாக உருவெடுத்ததால் மாணவியின் பெற்றோர் போலீசில் புகாரியதையடுத்து போலீசார் வக்கிர ஆசிரியர்கள் 8 பேர் மீதும் பல்வேறு பிரிவுகளின் முதல் தகவல் அறிக்கை (FIR) பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

மூலக்கதை