வாட்டர் பாய்’ கோஹ்லி
தோள்பட்டை காயம் முழுமையாக குணமடையாததால் தர்மசாலா டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி விளையாடவில்லை. ஆனாலும், பெவிலியனிலேயே இருந்துவிடாமல், அணி வீரர்களை உற்சாகப்படுத்தவும், ஆலோசனை தரவும் ‘வாட்டர் பாயாக’ களமிறங்கி கவனத்தை ஈர்த்தார் கோஹ்லி. நேற்றைய முதல் ஆட்டத்தின் இடைவேளையின்போது, சக வீரர்களுக்கு தண்ணீர் பாட்டில்களை எடுத்துக் கொண்டு கோஹ்லி, மைதானத்திற்குள் ஓடி வந்த போது, ரசிகர்கள் விசிலடித்து கைதட்டி வரவேற்றனர். வார்னர்-ஸ்மித் ஜோடியை பிரிக்க, கேப்டன் பொறுப்பேற்ற ரகானேக்கு சில டிப்ஸ்களை வழங்கிய கோஹ்லி, சிறப்பாக பந்துவீசிய குல்தீப் சிங்குக்கு பவுண்டரி எல்லையில் குடிக்க தண்ணீர் கொடுத்து உற்சாகப்படுத்தினார்.