சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் பாகுபலி 2 ரிலீஸ் ஆகாதா..?

PARIS TAMIL  PARIS TAMIL
சத்யராஜ் மன்னிப்பு கேட்காவிட்டால் பாகுபலி 2 ரிலீஸ் ஆகாதா..?

 இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி இயக்கிய 'பாகுபலி 2' திரைப்படம் அடுத்த மாதம் 28ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் வழக்கம்போல் கர்நாடகாவில் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆனால் இந்த முறை எழுந்துள்ள சிக்கலுக்கு சத்யராஜின் தமிழ் உணர்வுதான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது

 
கடந்த சில வருடங்களாகவே  காவிரி நதிநீர் பிரச்சனை பற்றி சத்யராஜ் கடுமையாக பல முறை கர்நாடக அரசை விமர்சித்து வந்துள்ளார். தனது பேச்சிற்காக சத்யராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் இல்லையே 'பாகுபலி 2' படத்தை கர்நாடகத்தில் ரிலீஸ் செய்ய வ்டமாட்டோம் என்றும் ஒரு குரூப் போராட்டம் செய்து வருகின்றது.  இந்த சர்ச்சை படரிலீஸ் நாள் நெருங்கும்போது இன்னும் விஸ்வரூபம் எடுக்கும் எனக் கூறப்படுகிறது.
 
இதே பிரச்சனை காரணமாகத்தான் பாகுபலி 2 ட்ரைலர் வெளியான அன்று கன்னட அமைப்புகளின் போராட்டத்தால் அங்கு எந்த தியேட்டரிலும் ட்ரைலர் திரையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இதற்கெல்லாம் மசிவது சத்யராஜின் பழக்கம் இல்லை. மன்னிப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சத்யராஜ் தரப்பு கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

மூலக்கதை