ஐசிசி, பிசிசிஐ நடவடிக்கை என்ன? ஆஸி.ஊடகங்கள் மீது முகமதுகைப் பாய்ச்சல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐசிசி, பிசிசிஐ நடவடிக்கை என்ன? ஆஸி.ஊடகங்கள் மீது முகமதுகைப் பாய்ச்சல்

புதுடெல்லி: இந்திய அணியின் முன்னாள் வீரர் முகமதுகைப், தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் ஒப்பிட்டு விராட் கோஹ்லியை விமர்சித்து, ஆஸ்திரேலியாவில் வெளிவரும் டெய்லி டெலிகிராப் பத்திரிகை கட்டுரை வெளியிட்டுள்ளது. சமீபத்திய போட்டிகளில் கோஹ்லி சிறந்த பீல்டிங்கை மேற்கொள்கிறார்.

அவர் மைதானத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொள்வதை, ஆஸி. ஊடகங்கள் கிண்டலடிக்கின்றன. பிராட்மேனுக்கு இணையாக விளையாடி வரும் கோஹ்லியை டிரம்புடன் ஒப்பிட்டு கூறுவது கண்டிக்கத்தக்கது.

அந்த கட்டுரையில் உள்ள ஆதாரமற்ற கருத்துக்களை பற்றி நான் விமர்சிக்க விரும்பவில்லை. ஐசிசியோ, பிசிசிஐயோ இது குறித்து நடவடிக்கை எடுக்காமல் அமைதி காப்பது அதிர்ச்சியளிக்கிறது.

எத்தனை விமர்சனங்களை வைத்தாலும் கோஹ்லி தன்னுடைய ஆட்டத்திறனை மேம்படுத்தியே வருகிறார்.

இவ்வாறு கைப் தெரிவித்துள்ளார்.

.

மூலக்கதை