தொடரூந்து நிலையத்துக்கு அருகே துப்பாக்கிச்சூடு! - மூவர் படுகாயம்!!
Porte d'Arras மெட்ரோ தொடரூந்து நிலையத்துக்கு அருகே நேற்று வெள்ளிக்கிழமை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதில் மூவர் படுகாயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Lille மாவட்டத்தின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள Place Jacques Febvrierஇல் ( Porte d'Arras தொடரூந்து நிலையத்துக்கு அருகில்), இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9.45 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மகிழுந்து ஒன்றில் வேகமாக வந்த நபர் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதனால் அப்பகுதி பெரும் பரபரப்புக்குள்ளாகியுள்ளது. இந்த தாக்குதலில் ஒரு இளம் வயதுடையவர் உட்பட குறைந்தது மூவர் காயங்களுக்கு உள்ளாகியிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்ட விசாரணைகளில், இது பண கொடுக்கல் வாங்கல் காரணமாக இடம்பெற்ற தாக்குதல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபர் பணத்தை திருப்பிக்கொடுக்க முயன்றுகொண்டிருந்ததாகவும், அதற்குள் இச்சம்பவம் இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்படு வருகின்றன.