திருப்பதி கோயிலில் ரூ.2.72 கோடி காணிக்கை

தமிழ் முரசு  தமிழ் முரசு
திருப்பதி கோயிலில் ரூ.2.72 கோடி காணிக்கை

திருமலை- திருப்பதி கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 38 ஆயிரத்து 319 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இலவச தரிசனத்துக்கான வைகுண்டம் மையத்தில் 22 அறைகளில் காத்திருந்த பக்தர்கள் 7 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

மலைப்பாதை வழியாக நடந்து வந்து திவ்ய தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்கள் 12 அறைகளில் காத்திருந்து 6 மணி நேரத்துக்கு பிறகு தரிசனம் செய்தனர். ரூ. 300க்கான டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை தரிசனம் செய்த பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்று எண்ணப்பட்டது.

இதில் பக்தர்கள் ரூ. 2. 72 கோடியை காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

.

மூலக்கதை