ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு - கி.வீரமணி பேட்டி

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் திமுகவுக்கு வெற்றிவாய்ப்பு  கி.வீரமணி பேட்டி

தஞ்சை- திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தஞ்சையில் கூறியதாவது: அதிமுக தேர்தல் சின்னம் தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்டவுடன் தமிழகத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த தலைவர்கள் சிலர், சின்னம் முடக்கப்படும் என கூறினர். தேர்தல் ஆணையமும் அதையே கூறியது.

ஆர். கே. நகர் தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாகி உள்ளது. திமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளோம்.

தமிழகத்துக்கு வறட்சி நிவாரணமாக ரூ. 39 ஆயிரம் கோடி கேட்டதற்கு வெறும் ரூ. 2 ஆயிரம் கோடிதான் மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதிமுகவின் இரு அணிகளையும் மிரட்டி வைத்துக் கொண்டு மத்திய அரசு தங்களுக்கான வாய்ப்பைப் பயன்படுத்தி கொள்ள நினைக்கிறது.

மதசார்பின்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல், சமூக நீதிக்கு ஆபத்து, மாநிலங்களின் உரிமைகள் பறிப்பு ஆகிய 3 ஆபத்துகளும் தமிழகத்தை நோக்கி வேகமாக வருகிறது. இதிலிருந்து பாதுகாக்க வேண்டும்.


இவ்வாறு கி. வீரமணி கூறினார்.



.

மூலக்கதை