கைதி தப்பியோட்டம் - 2 போலீசார் சஸ்பெண்ட்

தமிழ் முரசு  தமிழ் முரசு
கைதி தப்பியோட்டம்  2 போலீசார் சஸ்பெண்ட்

தஞ்சை- தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அடுத்த பொய்யுண்டார் குடிகாட்டைச் சேர்ந்தவர் சீனிவாசன்(38). வறட்சி நிவாரணம் குறைவாக வழங்கப்பட்டுள்ளதாக கூறி அதே பகுதியைச் சேர்ந்த கிராம உதவியாளர் ஜெயலட்சுமியிடம் சில தினங்கள் முன்பு தகராறு செய்தார்.

பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து சீனிவாசனை கைது செய்தனர். இதையடுத்து அவரை ஒரத்தநாடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் நேற்று அழைத்து வந்தனர்.

அப்போது சீனிவாசன் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். இதுதொடர்பாக பாப்பாநாடு காவல் நிலைய சிறப்பு எஸ். ஐ சேகர், தலைமை காவலர் ஜெபமாலை ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து தஞ்சை எஸ்பி மகேஷ் உத்தரவிட்டார்.


.

மூலக்கதை