வங்கதேச விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

தினமலர்  தினமலர்
வங்கதேச விமான நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா விமான நிலையத்தில் தற்கொலைபடை தாக்குதல் நடந்தது. வங்கேதேச தலைநகர் டாக்காவில் ஷகாஜிலால் சர்வதேச விமான நிலையம் அருகே உள்ள போலீஸ் சோதனை சாவடி மீது இன்று இரவு 8 மணியளவில் மர்ம மனிதன் திடீரென மனிதன வெடிகுண்டாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினான். பலத்த வெடி குண்டு சத்தம் கேட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பாதுகாப்புபடையினர் விரைந்தனர். ராணுவம் வரவழைக்கப்பட்டு சம்பவம் நடந்த இடம் சுற்றி வளைக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு காணப்படுகிறது. பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை