சச்சின் ஓய்வு பெறுவதை தடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ்

தமிழ் முரசு  தமிழ் முரசு
சச்சின் ஓய்வு பெறுவதை தடுத்த விவியன் ரிச்சர்ட்ஸ்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் அளித்த பேட்டி: 2007ம் ஆண்டு உலக கோப்பை தோல்வியால் (குரூப் ஸ்டேஜூடன் இந்தியா வெளியேறியது) மிகவும் மனமுடைந்து விட்டேன். வங்கதேசத்திடம் தோல்வியடைவோம் என நான் ஒருபோதும் நினைக்கவில்லை.

அதற்காக நாங்கள் அதிக நம்பிக்கையில் இருந்தோம் என்று கூற முடியாது. ஆனால் வங்கதேசத்தை வீழ்த்தி விடுவோம் என்ற நம்பிக்கையில் இருந்தோம்.

விளையாட்டின் நிச்சயமற்ற நிலைகளில் இதுவும் ஒன்று. இந்த தோல்வியால் நான் ஓய்வு பெறுவதை பற்றி சிந்தித்து கொண்டிருப்பதை அறிந்து கொண்ட சர் விவியன் ரிச்சர்ட்ஸ் எனக்கு போன் செய்து சமாதானப்படுத்தினார்.

இப்போது ஓய்வு பெற வேண்டாம் என கூறினார். இந்த சூழ்நிலையில் எந்தவிதமான முடிவையும் எடுக்க வேண்டாம் என்றும் கேட்டு கொண்டார்.

இவ்வாறு சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.


.

மூலக்கதை