நிறைய படங்கள் ஏற்க மறுத்தது ஏன்? நீது சந்திரா ஓபன் டாக்

தமிழ் முரசு  தமிழ் முரசு
நிறைய படங்கள் ஏற்க மறுத்தது ஏன்? நீது சந்திரா ஓபன் டாக்

ஆதி பகவன் படத்தில் ஜெயம் ரவியுடன் மோதி ஆக்‌ஷன் வேடத்தில் நடித்த நீது சந்திரா அதன்பிறகு பல வாய்ப்புகளை ஏற்க மறுத்து ஒதுங்கி இருந்தார். சூர்யாவின் சி 3 படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார்.

தற்போது வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கிறார். பட வாய்ப்புகளை மறுத்தது பற்றி நீது கூறியது: என்னை அடையாளம் காட்டியது தமிழ் சினிமாதான்.

ஒரு நாளும் அதை மறக்க மாட்டேன். நிறைய பட வாய்ப்புகளை ஏற்க மறுத்தது உண்மைதான்.

அதற்கு காரணம் அந்த வேடங்கள் எனது இமேஜை சிதைப்பதுபோல் இருந்தது. நல்ல கதாபாத்திரங்களுக்காக இன்னமும் நான் காத்திருக்கிறேன்.

இரட்டை வேடத்தில் முதன்முறையாக வைகை எக்ஸ்பிரஸ் படத்தில் நடித்துள்ளேன். ஆர். கே ஹீரோ.



ஷாஜி கைலாஷ் இயக்கி உள்ளார். இதில் நடிக்க கேட்டு என்னை இயக்குனர் அணுகியபோது, உங்களுக்காக அளந்து எழுதப்பட்ட கதாபாத்திரம் என்று விளக்கினார்.

மிகவும் ரசித்தேன். தோற்றத்திலும், நடிப்பிலும் இருமாறுபட்ட உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டியிருந்தது.

நடிப்புக்கு தீனி என்பதுடன் சஸ்பென்ஸும் உள்ளடக்கியிருந்ததால் ஒப்புக்கொண்டேன். தமிழ் சினிமா தற்போது புதிய பரிமாணத்தை பெற்றிருக்கிறது.

கதையும் கதாபாத்திரங்களும் நன்றாக உருவாக்கப்படுகிறது. அப்படியொரு படம்தான் வைகை எக்ஸ்பிரஸ்.

தற்போது படங்கள் வெளியிடுவது கடினம் என்பது எனக்கு தெரியும். சரியான நேரத்தில் இப்படம் வெளியாகியிருக்கிறது.

அடுத்து பெரிய படம் ஒன்றில் நடிக்கிறேன். அதற்கான அறிவிப்பு விரைவில் வரும்.

இவ்வாறு நீது சந்திரா கூறினார்.

.

மூலக்கதை