மயாமி ஓபன் டென்னிஸ் 2வது சுற்றில் ஷ்வெடோவா

தினகரன்  தினகரன்

மயாமி : அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் விளையாட, கஜகஸ்தானின் யரோஸ்லோவா ஷ்வெடோவா தகுதி பெற்றார். முதல் சுற்றில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனை ஜெலினா ஜன்கோவிச்சுடன் (செர்பியா) நேற்று மோதிய ஷ்வெடோவா 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். பின்னர் சுதாரித்துக் கொண்டு அதிரடியாக விளையாடிய அவர் 6-4 என 2வது செட்டை கைப்பற்றி பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, 3வது மற்றும் கடைசி செட் ஆட்டத்தில் அனல் பறந்தது. டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த அந்த செட்டில் 7-6 (7-3) என போராடி வென்ற ஷ்வெடோவா 2வது சுற்றுக்கு முன்னேறினார். மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டி 2 மணி, 28 நிமிடத்துக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது. கனடாவின் யூஜெனி பவுச்சார்டு 4-6, 7-5, 3-6 என்ற செட் கணக்கில் தகுதிநிலை வீராங்கனை ஆஷ்லி பார்தியிடம் (ஆஸ்திரேலியா) தோற்று வெளியேறினார்.

மூலக்கதை