உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் தங்கம் வென்றார் ஆங்குர் மிட்டல்

தினகரன்  தினகரன்

புதுடெல்லி : மெக்சிகோவில் நடைபெறும் ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பை துப்பாக்கிசுடுதல் போட்டியின் டபுள் ட்ரேப் பிரிவில், இந்திய வீரர் ஆங்குர் மிட்டல் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார். மிகவும் விறுவிறுப்பாக நடந்த இறுதிச் சுற்றில் மிட்டல் அபாரமாக செயல்பட்டு 75 புள்ளிகளுடன் முந்தைய உலக சாதனையை சமன் செய்து தங்கப் பதக்கத்தை முத்தமிட்டார். அவருக்கு கடும் போட்டியாக விளங்கிய ரஷ்ய நட்சத்திரம் ஜேம்ஸ் வில்லெட் 73 புள்ளிகள் பெற்று வெள்ளிப் பதக்கம் வென்றார். சீனாவின் யிங் குயி (52 புள்ளி) 3வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் பெற்றார்.கடந்த மாதம் டெல்லியில் நடந்த ஐஎஸ்எஸ்எப் உலக கோப்பையில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த மிட்டல், மெக்சிகோ தொடரில் தங்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இந்த தொடரில் மொத்தம் 9 பேர் கொண்ட இந்திய அணி பங்கேற்று விளையாடி வருகிறது. ராஷ்மீ ரதோர், அங்கத் வீர் சிங் பஜ்வா, மான் சிங், அம்ரிந்தர் சீமா ஆகியோர் ஆண்கள் மற்றும் மகளிர் ஸ்கீட் பிரிவில் களமிறங்குகின்றனர்.

மூலக்கதை