பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்ணிய ஆர்வலர்கள் - நிர்வாண போராட்டம்!!

PARIS TAMIL  PARIS TAMIL
பாலியல் வன்முறைக்கு எதிராக பெண்ணிய ஆர்வலர்கள்  நிர்வாண போராட்டம்!!

14 வயதுடைய சிறுமி ஒருத்தியை 7 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. அதைத் தொடர்ந்து பெண்ணிய அமைப்பைச் சேர்ந்த சில பெண்கள் நிர்வாணமாக ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்கள். 
 
கடந்த வாரத்தில் Nanterre (Hauts-de-Seine) நகரத்தில் மேற்படி வன்முறை சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பெண்ணிய ஆர்வலர்கள் சிலர், தங்களை அரை நிர்வாணமாக புகைப்படம் எடுத்து, அதை சமூக வலைத்தளங்களில் நேற்று புதன்கிழமை பகிர்ந்துள்ளனர். அவர்களின் உடலில் permis de violer என எழுதப்பட்டிருந்தது. அவர்கள் சமூக வலைத்தளத்தில் இதை பதிவு செய்திருந்தபோது, 'இந்த புகைப்படங்களை நேற்று (செவ்வாய்க்கிழமை) எடுத்திருந்தோம். இதை எங்களால் சகித்துக்கொள்ள முடியாது. குறித்த சிறுமிக்கு நீதி கிடைக்கவேண்டும். குற்றமிழைந்தவர்களுக்கு தண்டனை கிடைக்கவேண்டும்!' என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

மூலக்கதை