ஐபிஎல் தொடரில் இருந்து டிகாக் விலகல்?

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஐபிஎல் தொடரில் இருந்து டிகாக் விலகல்?

ஹாமில்டன்: தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையே 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டி முடிவில் 1-0 என தெ. ஆ.

முன்னிலை வகிக்க 3வது மற்றும் கடைசி டெஸ்ட் நாளை மறுநாள் ஹாமில்டனில் தொடங்குகிறது. இதில் தென்ஆப்ரிக்காவின் முன்னணி வீரரும், விக்கெட் கீப்பருமான டிகாக் , காயத்தால் விளையாடுவது சந்தேகமாகி இருக்கிறது.

2வது டெஸ்ட்டில் இக்கட்டான நேரத்தில் 91 ரன் விளாசி அணியை வெற்றி பாதைக்கு அழைத்துச்சென்ற டிகாக், வலது கை ஆள்காட்டி விரலில் காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். காயம் முழுமையாக குணமாக 4 முதல் 6 வாரங்கள் ஆகும் என்பதால் ஏப். 5ம் தேதி தொடங்கும் ஐபிஎல் தொடரிலும் அவர் பங்கேற்பது சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

ஏற்கனவே சொந்த காரணங்களுக்காக டெல்லி டேர்டெவிஸ் வீரர் டுமினி, ஐபிஎல்லில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அதே அணியைச் சேர்ந்த டிகாக்கும் விளையாட முடியாதது அந்த அணி நிர்வாகத்தை கவலை அடையச் செய்துள்ளது.


.

மூலக்கதை