விஜயகாந்த் மருத்துவமனையில் திடீர் அனுமதி!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தல் காரணமாக தமிழ்நாடே பரபரப்பாக உள்ளது. இந்நிலையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அதிமுக கட்சி பெயர், இரட்டை இலை சின்னம், கொடி அனைத்தையும் முடக்கி தேர்தல் ஆணையம் முடக்கியது.
இந்நிலையில் தேமுதிக விஜயகாந்த் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆண்டுதோறும் மேற்கொள்ளும் வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனைக்கு சென்றதாக தேமுதிக தலைமை நிலையம் செய்திக் குறிப்பை வெளியிட்டது.
இந்த பரிசோதனைக்கு பின் ஓரிருநாளில் விஜயகாந்த் வீட்டுக்கு திரும்புவார். அதனால் நிர்வாகிகளும் தொண்டர்களும் நேரில் வர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.