பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடக்கவிருந்த தாக்குதல் திட்டம் முறியடிப்பு..!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடக்கவிருந்த தாக்குதல் திட்டம் முறியடிப்பு..!

 பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள பகுதியில் சந்தேகத்துக்குரிய நபர்கள் நடத்தியுள்ள தாக்குதல் சம்பவத்தால், பாராளுமன்ற வளாகத்தில் பதற்றநிலை தோன்றியிருந்தது.

 
பிரித்தானிய பாராளுமன்றம் அமைந்துள்ள வெஸ்ட்மினிஸ்டர் பகுதியியல்  தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுபவரால் நடக்கவிருந்த தாக்குதலை முறியடித்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  
 
மேலும் குறித்த சந்தேக நபர் பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதலை மேற்கொள்ளுவதற்கு முன், வாகனத்தின் மூலம் 10 பேர் வரையில் மோதியுள்ளதாகவும், வெஸ்ட்மினிஸ்டர் பாலத்திற்கருகில் குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புப்படை தெரிவித்துள்ளது.
 
அத்தோடு சந்தேக நபர் கத்தி ஏந்திய வந்த நிலையில் பாராளுமன்ற காவலதிகாரியை தாக்கவே, அவரை சுட்டு வீழ்த்தியதாகவும், குறித்த தாக்குதல் ஒரு தீவிரவாத தாக்குதலுக்கான சதி என கருதுவதோடு, பாராளுமன்றின் உள்ளிருந்தோர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், தாக்குதல் குறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்நாட்டு பாதுகாப்புப்படையினர் அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை