நயன்தாரா படத்திற்கு ஏ சான்றிதழ் கவலையில் இயக்குநர்

PARIS TAMIL  PARIS TAMIL
நயன்தாரா படத்திற்கு ஏ சான்றிதழ் கவலையில் இயக்குநர்

 நடிகை நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் ‛டோரா'. இப்படத்தை சற்குணத்தின் உதவியாளர் தாஸ் ராமசாமி இயக்கி இருக்கிறார். மெர்வின் மற்றும் சாலமன் டோரா படத்திற்கு இசையமைத்து வருகிறார்கள். இப்படம் காரை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் கார் தான் ஹீரோ.இப்படத்தில் நயன்தாரா மற்றும் தம்பி ராமையா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்கள்.

 
இந்தநிலையில் படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் படத்தில் திகில் காட்சிகள் அதிகமாக உள்ளது. குழந்தைகள் பார்த்தால் பயப்படுவார்கள் என்று கூறி ஏ சான்றிதழ் வழங்கி உள்ளனர். படத்திற் யூ அல்லது யூஏ சான்றிதழ் கிடைக்கும் என்று நம்பியிருந்த இயக்குனருக்கும், தயாரிப்பாளர்களுக்கும் இது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படத்தின் இயக்குநர் மிகவும் கவலை உடன் இருக்கும் இந்த நிலையில் தணிக்கை குழுவினருக்கு படத்திற்கு மறுபடியும் ஏ சான்றிதழ் கொடுத்து இருக்கிறது.
 
இதைப்பற்றி இயக்குநர் தாஸ் ராமசாமி கூறுகையில்...." படத்தில் இரத்தம் சிதறும் காட்சிகளோ அல்லது அடிதடி காட்சிகளோ இல்லை. மேலும் படத்தில் தணிக்கை குழுவினர்கள் நீக்க கூறிய காட்சிகளையும் நீக்கிவிட்டேன். அதன் பிறகும் அவர்கள் படத்திற்கு ‛ஏ' சான்று தான் கொடுத்து இருக்கிறார்கள். படத்திற்கு ‛யூ' சான்று கிடைத்தால் தான் எனது முதல் படத்தில் வெற்றியே நான் கொண்டாட முடியும்" என்றார் கவலையுடன் .
 
டோரா படம் மார்ச் மாதம் 31ஆம் தேதி வெளிவருமா அல்லது படத்தை ரிவைசிங் கமிட்டிக்கு அனுப்பி யூ சான்றிதழுடனோ அல்லது யூஏ சான்றிதழுடனோ வெளிவருமா என்பது விரைவில் தெரியவரும்.

மூலக்கதை