சிறப்பான செயல்பாட்டிற்காக ஜடேஜா, புஜாராவுக்கு எஸ்சிஏ பாராட்டு

தமிழ் முரசு  தமிழ் முரசு
சிறப்பான செயல்பாட்டிற்காக ஜடேஜா, புஜாராவுக்கு எஸ்சிஏ பாராட்டு

ராஜ்கோட்: ஐசிசி டெஸ்ட் பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஜடேஜா, அஸ்வின் ஆகிய இருவரும் முதலிடத்தை பகிர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் சிறப்பான செயல்பாடுகள் காரணமாக, புதிதாக வெளியிடப்பட்ட தரவரிசை பட்டியலில், ஜடேஜா தனித்து நம்பர்-1 அந்தஸ்தை (899 புள்ளிகள்) கைப்பற்றியுள்ளார்.

அஸ்வின் 2ம் இடத்துக்கு (862 புள்ளிகள்) தள்ளப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ராஞ்சி டெஸ்டில் இரட்டை சதம் விளாசிய புஜாரா, பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் 2ம் இடத்துக்கு (861 புள்ளிகள்) முன்னேறியுள்ளார்.

ஜடேஜா, புஜாரா இருவருக்கும் சவுராஸ்டிரா கிரிக்கெட் சங்கம் (எஸ்சிஏ) பாராட்டு தெரிவித்துள்ளது. இது குறித்து எஸ்சிஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் போட்டிகளில், ஜடேஜா, புஜாரா இருவரும் மிக சிறப்பாக விளையாடினர்.

கிரிக்கெட் உலகில், அவர்களின் மதிப்புமிக்க பங்களிப்பை எஸ்சிஏ பாராட்டுகிறது’ என கூறப்பட்டுள்ளது.

ஜடேஜா, புஜாரா இருவரும் ரஞ்சி டிராபியில் சவுராஸ்டிரா அணிக்காக விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை