அதிர்ச்சி! மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் கொன்ற தந்தை!!

PARIS TAMIL  PARIS TAMIL
அதிர்ச்சி! மனைவியையும் மூன்று பிள்ளைகளையும் கொன்ற தந்தை!!

இனறு புதன்கிழமை காலை, கொடூரமான சம்பவம் ஒன்று  Tain-L'Hermitage (Drôme) இல் நடந்துள்ளது.
 
காவை 8h30 அளவில், 45 வயதுடைய ஆண் ஒருவர், தொடருந்தின் முன்னால் வீழந்து தற்கொலை செய்துள்ளார். அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இவரது சிற்றுந்தைச் சோதனையிட்ட ஜோந்தார்மினர்க்குப் பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில் தான் தனது குடும்பத்தினரைக் கொலை செய்து விட்டேன் என்ற ஒரு குறிப்பு இருந்துள்ளது.
 
உடனடியாக Beaumont-les-Valence இலிருக்கும் அவரின் வீட்டிற்குச் சென்ற ஜோந்தார்மினர், அங்கு, அவரது மனைவியும், மூன்று பிள்ளைகளும் கொல்லப்பட்டுக் கிடந்ததைக் கண்டுள்ளனர். இன்னமும் கொல்லப்பட்டவர்களின் வயது விபரங்களும், கொலை நடந்த விதம் பற்றிய விபரங்களும் ஜோந்தார்மினரால் வழங்கப்படவில்லை. அந்த வீடு தடயவியற் பிரிவினரால் சோதனையிடப்பட்டு வருகின்றது.
 

மூலக்கதை