பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள்!

PARIS TAMIL  PARIS TAMIL
பிரித்தானியாவில் ஒரு வயது குழந்தை உட்பட 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள்!

 பிரித்தானியாவில் 24 மணிநேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 
பிரித்தானியாவின் வடக்கு லண்டனில் கடந்த சனிக்கிழமை இரவு ஒரு வயது குழந்தை Gabriel சுத்தியலால் கொடூர முறையில் தாக்கப்பட்டு உயிருக்கு போராடினார். அதன் பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
 
இவரை கொலை செய்தது அவரின் தந்தை தான் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியது.
 
அதைத் தொடர்ந்து மறுநாள் பிற்பகலில் அதே வடக்கு லண்டனின் ஹாக்னி பகுதியில் 20 முதல் 29 வயது மதிக்கத்தக்க நபர் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இது தொடர்பாக 28 வயது மதிக்கத்தக்க நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
 
அன்று இரவு பார்கிங் பகுதியில் இளம் வயது வாலிபர் ஒருவர் மர்மான முறையில் தலையில் குண்டடி பட்டு கிடந்தார். அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போதும் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
 
இது தொடர்பாக பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொலை சம்வம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர் என்று கூறப்படுகிறது.
 
மேலும் 24 மணி நேரத்தில் மூன்று கொலைகள் நடந்துள்ள சம்பவம் லண்டன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மூலக்கதை