பரிஸ் - போலி துப்பாக்கியால் பரபரப்பு! - ஐந்து நபர்கள் கைது!!
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தில் போலி ரைஃபிள் வகை துப்பாக்கியால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து ஐந்து நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கைது செய்யப்பட்ட ஐந்து நபர்களும் மோசமான ஆயுதங்களுடன் மகிழுந்து ஒன்றில் ஏறிச் செல்வதை அக்கம் பக்கத்தில் வசித்த நபர்கள் பார்த்து, அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மாலை 3.30 மணிக்கு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 12 ஆம் வட்டாரத்தின் rue de Charenton வீதியில் உள்ள குடியிருப்பு ரைஃபிள் வகை துப்பாக்கியை தோளில் வைத்துக்கொண்டு நுழைந்துள்ளனர். அதைத்தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைந்துவந்த காவல்துறையினர் குறித்த ஐவரையும் அதிரடியாக கைது செய்தனர்.
அதன் பின்னர் குறித்த ஆயுதம் ப்ளாஸ்டிக்கினால் செய்யப்பட்ட போலியான துப்பாக்கி என தெரியவந்துள்ளது. கைதுசெய்யப்பட்டவர்கள் 22 வயதில் இருந்து 43 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.